தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 30, 2021, 3:26 PM IST

ETV Bharat / bharat

மேகாலயாவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு

மேகாலயாவில் வேகமாகச் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து
பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து

மேகாலயா:மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியிலிருந்து ஷில்லாங்கிற்கு 21 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. கிழக்கு கரோ - மேற்கு காசி மலைப்பகுதி எல்லையில் உள்ள நோங்ஷ்ராம் பாலத்தில் இன்று (செப். 30) அதிகாலை 12 மணியளவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ரிங்டி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது.

இதில் பேருந்து ஓட்டுநர், ஐந்து பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த ரோங்ஜெங், வில்லியம்நகர் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்த 16 பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து

பேருந்து வேகமாகச் சென்றதே விபத்துக்கு காரணம் என காயமடைந்த பயணிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நெல்லையில் நள்ளிரவு சைக்கிளில் ரோந்து சென்ற எஸ்பி: காவலர்கள் உற்சாகம்

ABOUT THE AUTHOR

...view details