டெல்லி : பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா திங்கள்கிழமை (ஜன.24) பாஜக, பஞ்சாப் லோக் காங்கிரஸ் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லியில் நடந்தது. இந்தச் சந்திப்பின்போது ஜெ.பி. நட்டா , “பாஜக மற்றும் கேப்டன் அமரீந்தர் சிங் (Captain Amarinder Singh) தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ் ( Punjab Lok Congress), சக்யுக்தா அகாலி தளம் தின்சா (Samyukta Akali Dal-Dhindsa) உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளன” என்றார்.
அதன்படி பா.ஜனதா கட்சிக்கு 67 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 37 தொகுதிகளில் பஞ்சாப் லோக் காங்கிரஸூம், 15 தொகுதிகளில் க்யுக்தா அகாலி தளம் தின்சா கட்சியும் போட்டியிடுகின்றன.
இது குறித்து ஜெ.பி. நட்டா மேலும் கூறுகையில், “பஞ்சாப் நிலையாக இருந்தால் நாடு நிலையாக இருக்கும். பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பில் பஞ்சாப்பின் பங்களிப்பை நாடு மறக்க முடியாது. நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பஞ்சாப் எப்போதும் நிறைவேற்றி வருகிறது” என்றார்.