தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐஏஎஸ் அலுவலர்களுக்காக ரூ.11 கோடியில் 32 சொகுசு கார்கள்: அரசுக்கு கடும் கண்டனம்! - ஐஏஎஸ் அலுவலர்களுக்காக சொகுசு கார்கள்

ஐஏஎஸ் அலுவலர்களுக்காக தெலங்கானா அரசு சொகுசு கார்களை வாங்குவது எதிர்க்கட்சியின் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனை பாஜக, 'அதிகாரத்துவத்தை திருப்திப்படுத்துவதற்காக பொதுக் கருவூலத்தின் குற்றவியல் தூண்டுதல்' என்று குறிப்பிடுகிறது.

ஐஏஎஸ் அலுவலர்களுக்காக 32 சொகுசு கார்கள்
ஐஏஎஸ் அலுவலர்களுக்காக 32 சொகுசு கார்கள்

By

Published : Jun 14, 2021, 9:01 AM IST

ஹைதராபாத்: தற்போது நிலவும் கோவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் மாநிலத்தில் ஐஏஎஸ் அலுவலர்களுக்காக சொகுசு கார்களை வாங்குவதற்காக தெலங்கானா அரசு எதிர்க்கட்சியின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. மாநிலத்தில் கூடுதல் ஆட்சியர்களுக்கு விநியோகிப்பதற்காக 32 புதிய சொகுசு மல்டி-யூடிலிட்டி கார்கள் ஞாயிற்றுக்கிழமை பிரகதி பவனை அடைந்தன.

குறைந்த வருவாய், போதிய மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாமை காரணமாக அரசு கருவூலம் மோசமான நிலையில் இருக்கும் இச்சூழலில் கார் ஒன்றின் விலை 25 லட்சம் ரூபாய் என வரும் தகவல்கள் புருவங்களை உயர்த்தச் செய்கின்றன.

இந்த நடவடிக்கையை விமர்சித்த பாஜக செய்தித் தொடர்பாளர் கே. கிருஷ்ணா சாகர் ராவ், "மாநிலத்தில் 'அதிகாரத்துவத்தைத் திருப்திப்படுத்த' முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் மேற்கொண்ட நடவடிக்கை 'பொதுக் கருவூலத்தின் குற்றவியல் தூண்டுதலுக்கு' வழிவகுக்கிறது" என்று கட்சியின் எதிர்ப்பைப் பதிவுசெய்தார்.

தெலங்கானா மாநிலத்தில் கூடுதல் ஆட்சியர்களுக்காக 32 அதி சொகுசு வாகனங்கள் வாங்க 11 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்ததை முதலமைச்சர் கே.சி.ஆர். எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்று அவர் வினா தொடுத்தார். ஒரு தொற்றுநோய்க்கு நடுவில் தெலுங்கானா முதலமைச்சர் "பொது பணத்தை பெருமளவில் வீணடிப்பதில்" ஈடுபடுவதாகக் கூறி, தற்போதைய பொது சுகாதார நிலைமையில் இந்த வாகனங்களை "பயங்கரமான மற்றும் சிந்திக்க முடியாதது" என்று வாங்குவதற்கான முடிவை அவர் குறிப்பிட்டார்.

ஐஏஎஸ் அலுவலர்களுக்காக 32 சொகுசு கார்கள்

ஒரு தொற்றுநோய்க்கு (கரோனா) நடுவில் தெலங்கானா முதலமைச்சர் 'பொதுப்பணத்தை பெருமளவில் வீணடிப்பதில்' ஈடுபடுவதாகக் கூறி, தற்போதைய பொது சுகாதாரம் இருக்கும் நிலைமையில் இந்த வாகனங்களை வாங்குவதை 'பயங்கரமான மற்றும் சிந்திக்க முடியாதது' என்று என்று குறிப்பிட்டார் கிருஷ்ணா சாகர்.

கரோனா ஊரடங்கால் மாநிலத்திற்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் கடன்களைத் திரட்ட நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) வரம்புகளை அதிகரிக்க விரும்புவதாகவும் நிதியமைச்சர் ஹரிஷ் ராவ் சமீபத்தில் அறிக்கைகள் வாயிலாகத் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணா சாகர், தற்போதைய பேச்சுகளில் நிதியமைச்சரின் குறைந்தபட்ச நிதி நெறிமுறை குறித்தும் கேள்வி எழுப்பினார். ஏனெனில் அவரது துறை அதி சொகுசு வாகனங்களுக்கு கோடி ரூபாய் வெளியிடுகிறது என்றார்.

சொகுசு கார்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் பணத்தை மருத்துவமனைகளில் படுக்கைகளை விரிவுபடுத்தவோ அல்லது ஏழைகளுக்கு இலவச மருத்துவம் வழங்கவோ பயன்படுத்தப்படலாம் என்று கிருஷ்ண சாகர் பரிந்துரைத்தார்.

இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரிய அவர், வாகனங்கள் வாங்குவதை நிறுத்துமாறு அரசிடம் கேட்டுக்கொண்டார்.

அதிகாரத்துவத்தினரின் 'வெட்கக்கேடான திருப்திக்கு' தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அரசை அவர் குற்றஞ்சாட்டினார்.

"இந்த வெட்கக்கேடான அதிகாரத்துவத்தை திருப்திப்படுத்தும் கூடுதல் ஆட்சியாளர்களிடமிருந்து முதலமைச்சர் என்ன எதிர்பார்க்கிறார் என்று பாஜக தெரிந்துகொள்ள விரும்புகிறது" என்று கேட்டார்.

தெலங்கானா அரசின் இந்த நடவடிக்கையை அம்மாநில காங்கிரசும் விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்ரவன் தசோஜு, தெலங்கானா அரசின் இந்த நடவடிக்கையை 'பொறுப்பற்ற செலவினங்களின் உச்சபட்சம்' என்று கூறினார்.

ஐஏஎஸ் அலுவலர்களுக்காக 32 சொகுசு கார்கள்

"கே.சி.ஆர். தலைமையிலான டி.ஆர்.எஸ். அரசு பொதுப் பணத்தைக் கையாளுவதில் முற்றிலும் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டுள்ளது. அதற்கு மேல், கோவிட் காரணமாக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும்போது, கே.சி.ஆர். கூடுதல் ஆட்சியர்களுக்குப் பரிசாக 32 சொகுசு கார்களை தலா ரூ.30 லட்சத்திற்கு வாங்குவதற்கான தைரியம் உள்ளது.

அவர்களிடம் ஏற்கனவே அரசு கார்கள் உள்ளன; அவை நல்ல நிலையில் இருக்கின்றன. புதிய கார்களை வாங்க வேண்டிய அவசியம் என்ன?" என்று கேட்டார் தசோஜு.

மேலும் அவர், புதிய கார்களைக் கொண்டு ஆட்சியர்களை 'கவர்ந்திழுக்க' விரும்புவதாகவும், அவர்களை தனது தவறான நிர்வாகத்தின் 'வெறும் பார்வையாளர்களாக' மாற்ற கே.சி.ஆர். விரும்புவதாகவும் கூறினார்.

"டி.ஆர்.எஸ். அரசிடம் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளை உயர்த்துவதற்குப் பணம் இல்லை; பொதுப் போக்குவரத்துக்குப் பேருந்துகள் வாங்க பணம் இல்லை; ஒப்பந்தக்காரர்களுக்குப் பணம் செலுத்துவதற்குக்கூட பணம் இல்லை. இத்தகைய நெருக்கடியில் கே.சி.ஆர். பொதுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது”என்று தசோஜு கூறினார்.

கடுமையான செலவினங்களைக் கண்டித்து அவர், "இந்த நிதி நெருக்கடியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தேவையற்ற ஒப்பந்தத்திற்காக கே.சி.ஆர். அரசு கார் நிறுவனம், விற்பனையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதா என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்.

நிதி நிவாரணம் பெறுவது மாநில அரசின் சந்தேகத்திற்குரிய ஒப்பந்தமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details