புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக ரங்கசாமி கடந்த மாதம் ஏழாம் தேதி பதவியேற்றார்.
இரு கட்சிகளும் சபாநாயகர் பதவி, அமைச்சர் பதவிகளைப் பங்கிட்டுக் கொள்வதில், ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இரு கட்சிப் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்புகொண்டு பேசினார்.
அதையடுத்து, பதவி பங்கீட்டில் சுமுகத் தீர்வு ஏற்பட்டது. அதில், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர் பதவி, துணை சபாநாயகர் பதவியும், பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவிகள் வழங்க உடன்பாடு ஏற்பட்டது.
பாஜகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆறு பேர், மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள், மூன்று சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.