ஹைதராபாத்: குஜராத் சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி (பிற்பகல் 3.15 மணி), பாஜக 132 இடங்களில் வெற்றி பெற்றதுடன் 25 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. மேலும் பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 182 இடங்களில் 132 இடங்களில் வெற்றியைப் பதிவு செய்த பாஜக, ஏழாவது முறையாக குஜராத்தின் அரியணையில் ஏற உள்ளது.
இதில் பூபேந்திர படேல் வருகிற டிசம்பர் 12ஆம் தேதி குஜராத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என குஜராத் பாஜக அறிவித்துள்ளது. இதனிடையே மிகப்பெரிய இரண்டு சாதனைகளை பாஜக நிகழ்த்த உள்ளது.
சாதனை 1: அதில் ஒன்று, அதிக ஆண்டுகள் ஆட்சி அமைத்த கட்சி என்ற பெருமையை பாஜக அடைய உள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு முதன்முதலாக குஜராத்தில் ஆட்சி அமைத்த பாஜக, 2022 தேர்தல் வரை தொடர்ந்து 32 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. அதேநேரம், இதுவரை மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், 1977ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தது.