கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் பிராங்க்கோ முலக்கல் மீது கன்னிகாஸ்திரி ஒருவர் பாலியல் வன்புணர்வு புகார் ஒன்றை அளித்தார்.
இது தொடர்பாக 2018ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்து அதன் விசாரணை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவந்தது. இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பை கோட்டயம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் இன்று வழங்கியது.
அதன்படி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாதிரியார் பிரோங்க்கோவை குற்றவாளி என்று நிரூபணம் செய்ய போதிய ஆதாரம் இல்லை. எனவே பாதிரியார் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார் என நீதிபதி கோபகுமார் தீர்ப்பளித்துள்ளார்.