தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீல நிறமாக மின்னிய கடற்கரை... காரணம் என்ன? - Beach turn radiant blue

பெங்களூரு: கார்வார் கடற்கரையில் அலைகள் நீல நிறத்தில் தோன்றியது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bioluminescence makes Karwar Beach turn radiant blue
Bioluminescence makes Karwar Beach turn radiant blue

By

Published : Nov 24, 2020, 6:08 AM IST

கார்வர் கரையில் மெதுவாக கீழே விழுந்த அலைகளில் பிரகாசமான நீல நிறம் பளிச்சிட்டது. பயோலுமினசென்ஸ் என்பது உயிரினங்கள் தங்களின் ஒளியை வெளியிடும் திறன் என்பதாகும். கார்வார் கடற்கரை அலைகளில் நீல நிறம் பளிச்சிட்டதால், பொதுமக்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர்.

இதற்கான காரணம் குறித்து அறிகையில், கடற்கரையில் ஏராளமாக ஆல்காக்கள் இருக்கும். இந்த ஆல்காக்கள்தான் கடல் அலைகளில் மிதந்து ஒரு சிலவற்றை உள்ளடக்குகின்றன. இரவு நேரங்களில் ஆல்கா நோக்டிலுகா சிண்டிலன்கள் ஒளியை வெளியிடும். அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அது ஒளி அலைகள் போல் தெரிகிறது. முதல் முறையாக இந்த நிகழ்வு 2018 இல் கார்வாரில் நிகழ்ந்தது.

நீல நிறமாக மின்னிய கடற்கரை

நீல ஒளியின் அதிசயத்திற்கு அறிவியல் காரணம் என்ன?

விஞ்ஞான ரீதியாக டைனோஃப்ளாஜலேட் நோக்டிலுகா சிண்டிலன்ஸ் (Dinoflagellate Noctiluca scintillans) எனப்படும் நுண்ணுயிரிகள் உடலில் இருந்து ரசாயனங்களை சுரக்கும் நீல ஒளியை உருவாக்குகின்றன. மின்மினி பூச்சியின் வடிவத்தில் பிரகாசிக்கும். ஒற்றை உயிரணுவைக் கொண்ட இந்த நுண்ணுயிரிகள், மில்லியன் கணக்கான அளவில் ஒன்று சேரும்போது இதுபோன்ற நிகழ்வுகள் தெரியும் என்று அறிவியல் உலகம் கூறுகிறது.

நீல நிறமாக மின்னிய கடற்கரை

இதைப் பற்றி தெரியாதவர்களுக்கு, இது இயற்கையின் அதிசயம் என தோன்றலாம். பயோலுமினென்சென்ஸ் ஏற்படும்போது கடலுக்கு நீலநிற பளபளப்பு ஏற்படுவது வழக்கம். பயோலுமினென்சென்ஸ் என்பது ஆல்காவால் வெளிப்படும் ஒளி. ஆல்கா உடல்களில் உள்ள வேதியியல் எதிர்வினைகள் மூலம் அவை நீல ஒளியை வெளியிடுகின்றன.

இதையும் படிங்க:டி.ஆர்.பி. சார்ந்து இயங்கும் மீடியாக்களை கடுமையாக விமர்சித்த மத்திய அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details