தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுமியை கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது... 4 பேருக்கு போலீஸ் வலை... - இருவர் கைது

சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

Bihar
Bihar

By

Published : Aug 23, 2022, 1:21 PM IST

பாட்னா: பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள முரார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், கடந்த 16ஆம் தேதி சிறுமி ஒருவர் நோட்டு புத்தகங்களை வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அந்த சிறுமியை கடத்திச் சென்றனர்.

அந்த சிறுமியை பாட்னாவுக்கு அழைத்துச் சென்று, ஒரு அறையில் அடைத்து வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை தேடி அலைந்த பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே நான்கு நாள்கள் கழித்து, கடந்த ஆக. 20ஆம் தேதி சிறுமியை பக்சர் மாவட்டத்தில் உள்ள தும்ரான் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. பிறகு சிறுமி தானாக அவரின் வீட்டிற்கு வந்தடைந்தார்.

இதையடுத்து பெற்றோருடன் காவல்நிலையம் சென்று சிறுமி புகார் அளித்துள்ளார். அதில், 6 பேர் சேர்ந்து தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரில் சிவம் சிங், சச்சின் சிங் ஆகிய இருவரை கைது செய்தனர். மீதமுள்ள 4 பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:வரதட்சணையாக புல்லட் தராததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்

ABOUT THE AUTHOR

...view details