தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 2, 2022, 10:05 AM IST

ETV Bharat / bharat

பிகாரில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

பிகாரில் மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் விஜய் ஆர்யாவிற்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது.

Etv Bharatமாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ ரெய்டு
Etv Bharatமாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ ரெய்டு

பாட்னா: மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் விஜய் ஆர்யாவிற்கு சொந்தமான பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் பாட்னா, கயா மற்றும் அவுரங்காபாத் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை நடந்துவருகிறது. இதனிடையே விஜய் ஆர்யா கைது செய்யப்பட்டார்.

விஜய் ஆர்யா, முதன் முதலாக கயாவில் உள்ள குராரு சைனா மில் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து எம்சிசியில் இணைந்து, மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழுவில் உறுப்பினரானார்.

பல்வேறு மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகளாக, கதிஹார், பாகல்பூர், பக்சர், கயா, சாசாராம், கரீம் நகர், ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட சிறைகளில் தண்டனை அனுபவித்தார். 2018ஆம் ஆண்டில் சிறையில் இருந்து வெளியே வந்து தனது வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:ஐசரி கணேஷின் ரூ.8.94 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details