தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோட்டார் படகில் சிலிண்டர் வெடித்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு - பாட்னாவில் சிலிண்டர் வெடித்து விபத்து

பிகாரில் மோட்டார் படகில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

Bihar
Bihar

By

Published : Aug 6, 2022, 6:38 PM IST

பாட்னா: பிகார் மாநிலம் பாட்னாவின் மானேர் என்ற பகுதியில் சோன் ஆற்றில் மோட்டார் படகில் பயணித்த சிலர், கேஸ் சிலிண்டர் வைத்து சமையல் செய்துள்ளனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் மோட்டார் படகு மூழ்கவில்லை என்றும், அதை கரைக்கு கொண்டு வரலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மோட்டார் படகில் எல்பிஜி சிலிண்டரை கொண்டு செல்வது சட்டப்படி குற்றம் என்றும், பொதுமக்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details