சென்னை:மூத்த பரத நாட்டியக் கலைஞர் லட்சுமி விஸ்வநாதன் காலமானார். 79 வயதான அவர், பரத நாட்டிய உலகில் தனித்துவம் மிக்க கலைஞராக வலம் வந்தவர். பரத நாட்டியம் மட்டுமின்றி சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நாடக இயக்குநர், பரத நாட்டிய ஆசிரியர் உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்டவர்.
பரத நாட்டியக் கலைஞர் லட்சுமி விஸ்வநாதன் கலை சேவைக்காக அவருக்கு கலைமாமணி விருது மற்றும் சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.