தமிழ்நாடு

tamil nadu

தானேயில் இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல்

By

Published : Feb 21, 2020, 9:54 PM IST

மும்பை: செல்போன்கள் திருடியதாக சந்தேகத்தின் பேரில் தானேயில் இரண்டு இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல் நடந்தது.

இளைஞர்களுக்கு சரமாரி உதை
இளைஞர்களுக்கு சரமாரி உதை

மகாராஷ்டிரா தானே நகரத்தில் அமைந்துள்ள மொபைல் போன் கடைகளில் அடிக்கடி செல்போன்கள் திருடப்படுவதாக புகார்கள் உள்ளது.

இது குறித்து கடை உரிமையாளர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக சந்தேகிக்கும் விதமாக இருவர் அங்கு நடமாடியுள்ளனர்.

அவர்களை பிடித்து விசாரித்த கடை உரிமையாளர்கள், ஒருகட்டத்தில் இரு இளைஞர்களையும் சரமாரியாக தாக்கினர்.

இளைஞர்கள் தாக்கப்பட்ட காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது.

செல்போன் திருடர்கள் என நினைத்து சரமாரி தாக்குதல்

இளைஞர்களை தாக்கிய கடை உரிமையாளர்கள் மீது காவலர்கள் வழக்குபதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details