தமிழ்நாடு

tamil nadu

விளையாட்டில் கிடைத்த வெற்றி, உற்சாகத்தில் உயிரிழந்த சோகம்!

மும்பை: செல்போனில் தொடர்ச்சியாக பப்ஜி கேம் விளையாடிய இளைஞர், பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Jan 20, 2020, 6:11 PM IST

Published : Jan 20, 2020, 6:11 PM IST

பப்ஜி
பப்ஜி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ரேவத் பகுதியில் விசித்த வந்த ஹர்ஷல் தேவிதாஸ் (Harshal Devidas), கேம் விளையாடுவதிம் அதிகம் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக செல்போனில் பப்ஜி கேமினை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக விளையாடியுள்ளார். அவர் வேலைக்கும் செல்லாமல், கேம் மீது உள்ள போதையினால் அதற்கு அடிமையாகி இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பப்ஜி கேமில் கிடைத்த வெற்றியினால் அதிகப்படியான உற்சாகம் உடைந்துள்ளார். ஒரு கட்டத்தில் பக்கவாதம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

’பப்ஜி’யால் இளைஞர் உயிரிழப்பு

இதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கேம் மீது உள்ள அதீத ஆர்வத்தினால், இளைஞர்கள் உயிரிழப்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

இதையும் படிங்க: குளு குளு கொடைக்கானலில் கொடிகட்டிப் பறந்த பாலியல் தொழில்: 6 இளம்பெண்கள் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details