வாராக்கடன், நிர்வாகச் சிக்கல்களுக்கு இரையாகி கடந்த சில மாதங்களாகப் பெரும் சரிவைச் சந்தித்துவந்த யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தனது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது.
மேலும், ஏப்ரல் 3ஆம் தேவி வரை யெஸ் வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதி அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. இது அவ்வங்கி வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீண்டகாலமாக முடங்கிக்கிடக்கும் யெஸ் வங்கி மீண்டும் அதன் இயல்பான செயல்பாட்டுக்குத் திரும்பவுள்ளதாக அவ்வங்கி அறிவித்துள்ளது.