தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

4ஆவது முறையாக முதலமைச்சரானார் எடியூரப்பா..! - Yediyurappa

பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சராக பி.எஸ்.எடியூரப்பா 4ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

yeddiyurappa

By

Published : Jul 26, 2019, 9:03 PM IST

கர்நாடகா சட்டப்பேரவையில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

இதனிடையே, 105 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக ஆட்சியமைப்பது குறித்து மௌனம் காத்து வந்த நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா இன்று காலை ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர், எடியூரப்பாவை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதனை தொடர்ந்து, இன்று மாலை 6.30 மணிக்கு ராஜ்பவனில் ஆளுநர் முன்னிலையில் பி.எஸ். எடியூரப்பா, நான்காவது முறையாக கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

பின்னர், ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, கர்நாடகா சட்டப்பேரவையில் வரும் 29ஆம் தேதி பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளுக்கு 100 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி அளிக்க தனது தலைமயிலான அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.

அதேபோன்று, பிரதான் மந்திரி கிஸான் சமாம் யோஜ்னா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்றும் எடியூரப்பா உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details