உலகளாவிய சுகாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இன்று விவாதம் நடைபெற்றது. அதில், இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கவுன்சிலர் பிரதிக் மாத்தூர், எதிர்காலத்தில் பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள நீண்ட காலத்திற்கான வியூகங்கள் வகுப்பது அவசியமாகிறது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "சுகாதாரமான வாழ்க்கை வாழ்வது என்பது அனைவரின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அரசுகள் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறைவான விலையில் மருந்துகள், நோய் கண்டறியும் கருவிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றை அனைவருக்கும் எடுத்துச் செல்வதில் சிக்கல் உள்ள நிலையில், எதிர்காலத்தில் பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள நீண்ட காலத்திற்கான வியூகங்கள் வகுப்பது அவசியமாகிறது.