தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாலையில் பெண் காவல் அலுவலர் எரித்துக் கொலை...!

திருவனந்தபுரம்: பணி முடிந்து வீட்டிற்குச் சென்ற பெண் காவலரை அடையாளம் தெரியாத நபர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் காவல்அலுவலர்

By

Published : Jun 15, 2019, 7:41 PM IST

Updated : Jun 15, 2019, 7:49 PM IST

கேரள மாநிலம், மாவெல்லிகெரே அடுத்த வள்ளிகுன்னம் காவல் நிலையத்தில் காவல் அலுவலராக பணியாற்றி வந்தவர் சௌமியா புஷ்பாகரன் (30). இவர் இன்று காலையில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்துவந்த அடையாளம் தெரியாத நபர், வழிமறித்து திடீரென்று அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துள்ளார். இதில் சௌமியா உடல் முழுவதும் தீப்பற்றி துடிதுடித்து அங்கேயே இறந்தார்.

பெண் காவல் அலுவலர் எரிக்கப்பட்ட இடம்

இந்தச் சம்பவத்தில் தீ வைத்த அடையாளம் தெரியாத நபருக்கும் காயமேற்பட்டது. இந்நிலையில் தகவலறிந்து வந்த காவல் துறையினர் காயமடைந்த அந்த நபரை கைது செய்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தீ வைத்த நபர்

பெண் காவல் அலுவலரின் உடலை ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய அவர்கள், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jun 15, 2019, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details