தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்டம்: உத்தரப் பிரதேசத்தில் தொடரும் பெண்கள் போராட்டம்

லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு ஆகியவற்றிற்கு எதிராக ஏராளமான பெண்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

By

Published : Jan 25, 2020, 8:39 PM IST

Updated : Jan 25, 2020, 10:26 PM IST

Women brigade continues their anti-CAA stir in Lucknow
Women brigade continues their anti-CAA stir in Lucknow

இந்தப் போராட்டத்தில் ஒரு பெண் தனது நான்கு வயது குழந்தையுடன் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்தச் சட்டம் நாட்டின் அடிப்படை அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறினார். மேலும், "இந்தியாவை அழிக்க முயற்சிப்பவர்களின் கைகளில் நாடு உள்ளது. இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க முஸ்லிம் பெண்கள் நாங்கள் எங்கள் முகத்திரையை எடுத்து வீதிகளில் இறங்க வேண்டும்" என்றார்.

மற்றொரு பெண், "பாசிச சக்திகளிடமிருந்து நம் நாட்டைப் பாதுகாக்கும் சக்தியை கடவுள் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார், நாங்கள் கடைசிவரை போராடுவோம்" என்று கூறினார். உத்தரப் பிரதேச தலைநகரின் பாரம்பரிய பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடந்த பல நாட்களாக சிஏஏ (CAA) மற்றும் என்.ஆர்.சி (NRC) க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் குறித்து சப்னா என்பவர் கூறும்போது, "இந்தச் சட்டம் 100 விழுக்காடு தவறானது. தற்போது இந்தச் சட்டம் மக்களால் மறுக்கப்பட்டுள்ளது என்பதை ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே அவர்கள் அதை திரும்பப் பெற வேண்டும்" என்று அவர் கூறினார்.

மேலும் எங்களுக்கு எதிராக காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இதெற்காகவெல்லாம் நாங்கள் பின்வாங்க மாட்டோம் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

Last Updated : Jan 25, 2020, 10:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details