தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசு அலுவலர்களைக் காலணிகளால் தாக்கிய பெண்கள்! - மத்திய பிரதேசத்தில் அரசு அதிகாரிகளை காலணிகளால் தாக்கிய பெண்கள்

போபால்: வீடு வழங்கும் திட்டத்தில் ஏற்பட்ட முறைகேடு குறித்து, கேள்வி கேட்ட பெண்களிடம் முறையான பதில் கூறாத அரசு அலுவலர்கள் காலணிகளால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

காலணிகளால் தாக்கிய பெண்கள்

By

Published : Oct 4, 2019, 2:49 PM IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து இரண்டாவது ஆண்டான 2015இல், “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வீடு வழங்கப்படுவதற்காகக் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் ”பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வீடுகள் தவறாக ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, இத்திட்டத்தின் கீழ் வீடுகள் பெற்ற பெண்கள், அரசு அலுவலர்களிடம் கேட்டபோது முறையான பதில் கூறாததால் ஆத்திரமடைந்த பெண்கள் தங்கள் காலணிகளால் அரசு அதிகாரிகளை வெளுத்து வாங்கினர்.

இதையும் படிஙக : பேருந்தில் நடத்துநரை சரமாரியாகத் தாக்கிய காவலர்கள்! - காணொலி வைரல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details