லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூரிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் ஆராதனா ராய்(35). இவருக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அமித் குஷால் என்பவருக்கும் பள்ளியில் விடுமுறை எடுப்பது தொடர்பாக பிரச்னை இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், அவர்களது வாக்குவாதம் முற்றிய நிலையில், குஷால், ஆராதனாவை பள்ளி வளாகத்திலேயே இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.