தமிழ்நாடு

tamil nadu

இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு - ராஜஸ்தானில் நடந்த கொடூரம்!

ஜெய்ப்பூர்: கணவரை தாக்கி விட்டு இளம் பெண்னை மூன்று பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : May 26, 2020, 9:45 PM IST

Published : May 26, 2020, 9:45 PM IST

Banswara district news  gangrape in rajasthan  woman gang raped in Rajasthan  Banswara gang rape  கூட்டு பாலியல் வன்புணர்வு  ராஜஸ்தானில் கூட்டு பாலியல் வன்புணர்வு  இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு
woman gang raped

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரோஷன் லால், ஆத்ரிகா தம்பதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த தம்பதியின் நேற்று முன்தினம் (மே 24) சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர், ரோஷன் லாலை தாக்கி விட்டு மனைவி ஆத்ரிகாவை வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். பின்னர், ஆத்ரிகாவை வீட்டின் அருகே வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, இந்த தம்பதியினர் சதர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படியில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details