தெலங்கானா அரசுப் பேருத்து ஓட்டுநர், நடத்துநர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம் ஊழியர்கள் வேலையிழந்ததாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திடீர் உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.