தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் துணை ராணுவத்தை திரும்பப் பெற அமைச்சர் கோரிக்கை - withdrawal paramilitary forces

புதுச்சேரி: துணை ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

துணை ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்
துணை ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்

By

Published : Jan 9, 2021, 6:09 AM IST

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தடையாகவும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெறக் கோரி முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். இதனால் அண்ணா சிலை அருகே துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

இருப்பினும் போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் திடீரென மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது துணை ராணுவப்படையினர் போராட்டக்காரர்கள் சிலரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

இதைக்கண்டித்து சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி பேசுகையில், "துணை ராணுவத்தை புதுச்சேரிக்கு வரவழைத்துள்ளது கண்டனத்திற்குரியது. ஆளுநர் தனிஒருவர் பாதுகாப்பிற்கு புதுச்சேரியில் 10 நாள்களாக தங்கியுள்ளனர். இதனால் அவர்களுக்கான செலவு தேவையற்றது. உடனடியாக துணை ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: துணை முதலமைச்சர் பங்கேற்ற கூட்டரங்கில் வாக்குவாதம் செய்த ஒப்பந்ததாரர்!

ABOUT THE AUTHOR

...view details