மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மசோதாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து மாநில வடக்கு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு அமைப்பாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு அனழப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "உயிரே போனாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அதேபோல் புதுச்சேரியிலும், ஆட்சியே கவிழ்ந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” என்றார்.