தமிழ்நாடு

tamil nadu

நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதுதான் சரியான நீதியா?

By

Published : Mar 19, 2020, 12:54 PM IST

நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதுதான் சரியான நீதியா? என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்
முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்

2012ஆம் ஆண்டில் டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வழக்கில், ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். அதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ராம் சிங் திகார் சிறையில், 2013 மார்ச் 11ஆம் தேதி சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்னொரு குற்றவாளி சிறுவர் என்பதால் மூன்றாண்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார்.

நிர்பயா வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரையும் வரும் மார்ச் 20ஆம் தேதியன்று அதிகாலையில் தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், நாளை தூக்கிலிடப்படவுள்ள நிர்பயா குற்றவாளிகள் குறித்து பேசினார். வழக்கின் தீர்ப்பு குறித்து பல்வேறு விதங்களில் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் பேசிய காணொலி

அவர் கூறியதாவது: நிர்பயா வழக்கில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறதா?. உச்ச நீதிமன்றம் மிகவும் அரிதாகவரும் வழக்குகளில், எவ்வித சந்தேகமுமில்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், எல்லா வாய்ப்புகளும் நிறைவடைந்தால் மட்டுமே, மரண தண்டனை விதிக்க வேண்டுமென பச்சன் சிங் வழக்கில் தெரிவித்தது.

கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் சமூகம் அதைப் பாடமாக எடுத்துக் கொள்ளும். ஒருவேளை, ஒரே நாளில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டால், அந்த குற்றத்தையும், குற்றவாளிகளையும் மக்கள் விரைவில் மறந்துவிடுவார்கள். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை சமூகத்திடம் கொண்டுபோய் சேர்க்கலாம். அதுவே, குற்றம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தும்.

நிர்பயாவின் பெற்றோருக்கு இந்த குற்றவாளிகளை தூக்கிலிடுவதால், நீதி கிடைத்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் குறித்து எனக்கும் அனுதாபமிருக்கிறது. உண்மையிலே நான் வருந்துகிறேன். ஆனால், ’ஒரு கண்ணுக்கு, பதிலாக இன்னொரு கண் என்ற கொள்கை’ உலகம் முழுவதையும் குருடாக்கும் என்ற காந்திஜியின் வாக்கை நினைவுகூற வேண்டும்.

குற்றத்திற்கு நீதி வழங்கும்போது பழிவாங்குதல் என எதுவுமில்லை. வன்மமும், பழி வாங்குதலும் ஒன்றில்லை. நான் உங்கள் உயிரை எடுத்துக்கொண்டால், பதிலுக்கு நீங்கள் என் உயிரை எடுப்பீர்கள் என்பது நீதியில்லை. தண்டனை என்பது குற்றத்திற்கான மறுவினை, பிழைகளை திருத்தும் நீதி, சீர்திருத்தம், என்றார்.

இதையும் படிங்க: 5,800 கைதிகளை விடுவிக்கக் காத்திருக்கும் சிறைக் காவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details