புதுச்சேரி அடுத்த பிச்சவீரன்பேட் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (29). இவருக்கும் கொம்பாக்கம்பேட் பகுதியைச் சேர்ந்த காவலர் சண்முகத்திற்கும் 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு குழந்தை பெறுவதற்காகத் தாய் வீட்டிற்கு கவிதா சென்றார். தற்போது கவின் என்ற நான்கு வயது ஆண் குழந்தை உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விட்டுச் சென்ற சண்முகம் மீண்டும் அவரை வீட்டிற்கு அழைக்கவில்லை.
இதுதொடர்பாக கவிதா குடும்பத்தினர் சண்முகத்திடம் கேட்டபோது, எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டார்.