தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 18, 2020, 12:56 PM IST

Updated : Jun 18, 2020, 3:20 PM IST

ETV Bharat / bharat

ஆயுதமின்றி இந்திய வீரர்களை அனுப்பியது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: கல்வான் பகுதிக்கு ஆயுதமின்றி இந்திய வீரர்களை அனுப்பியது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

இந்தத் தாக்குதலின்போது இந்திய வீரர்களைவிட சீன வீரர்கள் ஐந்து மடங்கு அதிகமாக இருந்தார்கள் என்றும் இந்திய வீரர்கள் ஆயுதமின்றி அங்கு சென்றனர் என்றும் தகவல் வெளியாகின. மேலும், இரவில் இந்திய வீரர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதைக் கண்காணிக்க தெர்மல் ஸ்கேனர்களையும் சீனா பயன்படுத்தியாகவும் தகவல் பரவியது.

இது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "என்ன தைரியம் இருந்தால் ஆயுதமின்றி இருக்கும் நமது வீரர்களை சீனா கொல்லும்? வீர மரணமடந்த நமது வீரர்களை ஆயுதமின்றி அனுப்பிய காரணம் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக ராகுல் காந்தி புதன்கிழமை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் ட்வீட்டை குறிப்பிட்டு, "வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு இரண்டு நாள்கள் எடுத்துக் கொண்டது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையும் படிங்க: இந்தியா - சீனா மோதல்: ஐநா கவலை!

Last Updated : Jun 18, 2020, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details