ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்ஜெட்டுக்கு நிதி எங்கிருந்து வரும்? - நாராயணசாமி கேள்வி - nirmala sitharaman

புதுச்சேரி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி எங்கே உள்ளது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாராயணசாமி
author img

By

Published : Jul 5, 2019, 6:23 PM IST

புதுச்சேரி மாநிலத்தின் 2019-2020 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாகவும், அதில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் இன்று முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அதன் பின்னர் பேசிய நாராயணசாமி, "அமைச்சரவைக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் வங்கியில் வாங்கும் கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தினால் மத்திய அரசு வட்டி தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் இனி வருங்காலங்களில் மாநில அரசும் மூன்று சதவீத வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளோம், இதன் மூலம் 2500 மகளிர் சுய உதவி குழுக்கள் பயன்தரும் என்றார்.

இந்த திட்டத்திற்கு அன்னை இந்திராகாந்தி பெண்கள் முன்னேற்ற திட்டம் என்று பெயர் உள்ளது. புதுச்சேரியில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு 2 முதல் 3 ரூபாய் வரை விலை வரி உயர்த்தி வருவாயை பெருக்குவதற்கு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய பிளாஸ்டிக் பொருளுக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஏற்கனவே திட்டமிட்டபடி தடை அமலுக்கு வரும்" என தெரிவித்தார்.

'நாட்டின் பட்ஜேட்டுக்கு நிதி எங்கிருந்துவரும்?' - நாராயணசாமி கேள்வி

தொடர்ந்து பேசி அவர், "இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் திட்டங்கள் அதிகமாக அறிவித்துள்ளனர். அதற்கான நிதி ஆதாரமும் அதிகரித்துள்ளது. இதற்கான நிதி எங்கிருந்து வரும் என தெரியவில்லை! இதற்கு மத்திய நிதியமைச்சர் சீதராமன் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தலைமைச் செயலர் அஸ்வின் குமார் மற்றும் துறை செயலர்கள் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details