தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘கொரோனாவை தடுக்க மாஸ்க் தேவையில்லை, நமஸ்காரம்தான் தேவை’ - பிரகாஷ் ஜவடேகர் - Prakash Javadekar latest press meet

டெல்லி: மாஸ்க் அணிவதால் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Prakash Javadekar on Coronavirus
Prakash Javadekar on Coronavirus

By

Published : Mar 5, 2020, 8:10 AM IST

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட் 19 (கொரோனா வைரஸ்) அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. அதேபோல் இந்தியாவிலும் கேரள மாநிலத்தில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது, பின்னர் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர்கள் குணமடைந்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது மீண்டும் கோவிட் 19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 28 பேருக்கு தற்போது கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோவிட் 19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தற்போது பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துவருகிறது.

கோவிட் 19 வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழலில் தற்போது மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "மாஸ்க் அணிவது மட்டும் இதற்கான தீர்வு அல்ல, சொல்லப்போனால் அனைவருக்கும் மாஸ்க் தேவையில்லை.

அதற்கு பதிலாக உங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். பொது இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். வைரஸ் தொற்று ஏற்படக்கூடாது என்று பிரார்த்தனை செய்யுங்கள்" என்று தெரிவித்தார்.

சர்வதேச அளவில் கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு கொரோனா?

ABOUT THE AUTHOR

...view details