தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடாளுமன்ற கட்டடம் கட்ட அனுமதி: உச்ச நீதிமன்றத்திற்கு அமைச்சர் நன்றி - 2022ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்றம்

நாடாளுமன்ற கட்டடம் கட்ட அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ட்வீட் செய்துள்ளார்.

Hardeep Singh Puri
Hardeep Singh Puri

By

Published : Jan 5, 2021, 3:18 PM IST

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், அதை விசாரித்த நீதிபதிகள் திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பை மத்திய வீட்டுவசதி மற்றம் நகர்ப்புறத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகளவில் சிறந்த தலைநகரமாக டெல்லிஉருவெடுக்கும். 2022ஆம் ஆண்டில் நாடு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்படும். இது புதிய இந்தியாவின் கனவுகளை வெளிப்படுத்துவதாக இருக்கும்" என்றார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு நன்றி தெரிவித்த அவர், சூழலியல் சார்ந்த விஷயங்கள் முறையாகப் பின்பற்றப்பட்டு, மிக உயர்ந்த தரத்தில் நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:உறுதியான நடவடிக்கை மூலம் கோவிட்-19ஐ எதிர்கொண்ட இந்தியா: உலக சுகாதார அமைப்பு பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details