சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் பேன்திரி என்ற பகுதியில் தனிமைப்படுத்தல் மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. வெளிமாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் அங்கு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், அங்கு பணிபுரியும் சுகாதார ஊழியர் ஒருவர் அம்மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளரை மூர்க்கத்தனமாகத் தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.