கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது வெளியில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதனை அணியாமல் பொறுப்பற்று பலர் வெளியே சுற்றித்திரிந்து வரும் சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளன.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் முகேஷ் குமார் பிஜபத் (40) என்பவர் முகக் கவசம் அணியாமல் வீதியில் சாவகாசமாக நடந்து சென்றுள்ளார்.
இதனைக் கண்ட சில காவலர்கள், முகேஷை கண்டித்து முகக் கவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால், குடிபோதையிலிருந்த முகேஷ் காவல் துறையினர் சொன்னதைக் கேட்காமல் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் நடந்த கைகலப்பின் போது, முகேஷை மடக்கி கீழே தள்ளி காவலர் ஒருவர் அவர் கழுத்தின் மீது முழங்காலை வைத்து அழுத்தியுள்ளார்.