சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்தவர் பாகீரதி பிரசாத் பிசாய்(75). விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ள இவர், 1996ஆம் ஆண்டு முதல் தனது வீட்டின் மொட்டை மாடியில் விவசாயம் செய்து வருகிறார். கோதுமை, தானியங்களை வளர்ப்பதற்கு பல்வேறு விவசாய பிரதிநிதிகளுடன் பரிசோதித்தும் உள்ளார்.
தினம்தோறும் அன்றாட பணிகளை முடித்த பின், மொட்டை மாடிக்குச் சென்று தனது பயிர்களையும் காய்கறிகளையும் கவனித்துக்கொள்வதில் நேரத்தை செலவிடுகிறார் இந்த மொட்டைமாடி விவசாயி. இவரது இந்த வித்தியாசமான விவசாய முறையைப் பார்க்க பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் அவரது வீட்டிற்குப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.