தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அடேய் ஓபன் பண்ணுங்கடா' - ஒரு கேட்டை "தூக்கி" மற்றொரு கேட்டை "மிதித்து" வீரநடைப் போட்ட யானை!

ரயில்வே கேட்டை பொறுமையாக தூக்கி வீரநடைப் போட்ட யானையின் காணொலி சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.

By

Published : Dec 10, 2019, 9:45 PM IST

elephant
வீரநடை போட்ட யானை

இந்திய வனத்துறை அலுவலர் சுசாந்தா நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட யானையின் காணொலி தற்போது வைரலாகியுள்ளது.

அதில், சாலையில் நடந்து வரும் பெரிய யானை ரயில்வே லெவல் கிராசிங் கேட்டை வந்தடைகிறது. கேட் மூடப்பட்டுள்ளதால், யானை தனது தந்தத்தின் உதவியால் அதனைத் தூக்கியது. பிறகு சிறிது தலையைக் குனிந்து, கேட்டை தூக்கி வெற்றிகரமாகத் தாண்டியது. இருப்பினும் மீண்டும் திரும்பி வந்து, கேட் மூடப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்துவிட்டு யானை நடந்து செல்லும். பின்னர் தடையாக இருந்த மற்றொரு கேட்டை, காலை உபயாகித்து யானை மிதித்துத் தாண்டி நடந்து செல்கிறது.

இந்த காணொலியைப் பதிவிட்ட சுசாந்தா நந்தா, ' லெவல் கிராசிங் அல்லது ரயில் பாதையோ யானையைத் தடுத்து நிறுத்த முடியாது. அவைகளுக்குச் செல்லும் பாதைகள் நன்றாக ஞாபகம் இருக்கும். ஆனால், இரண்டு முனைகளிலும் வெவ்வேறு நுட்பங்களை கையாண்டிருப்பது சுவாரஸ்யம் ஏற்படுத்துகிறது ' என்றார்.

இதையும் படிங்க: உங்கள் பிள்ளைகளின் உயிர்கள் ஊசலாடுகின்றன - Say No To Single Use Plastic!

ABOUT THE AUTHOR

...view details