தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விண்வெளி ஆய்வுத் துறையின் மறுகட்டமைப்புகளுக்கு மாதவன் நாயர் வரவேற்பு!

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வுத் துறையில் மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் வரவேற்கக் கூடியதே என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் கூறியுள்ளார்.

By

Published : Jun 18, 2020, 4:48 PM IST

விண்வெளி ஆய்வுத்துறையில் நிகழவுள்ள மறுகட்டமைப்புகளை வரவேற்றுள்ள மாதவன் நாயர்
விண்வெளி ஆய்வுத்துறையில் நிகழவுள்ள மறுகட்டமைப்புகளை வரவேற்றுள்ள மாதவன் நாயர்

இது தொடர்பாக ஜி மாதவன் நாயர் கூறுகையில், "அண்மையில் வெளியாகியுள்ள சில ஊடக அறிக்கைகள் மூலமாக இந்திய விண்வெளித் துறை மறுகட்டமைப்பு, விரிவாக்கம் குறித்து அறிய முடிகிறது.

விமர்சனம் முன்வைக்கும் சிலர், இந்திய விண்வெளித் திட்டம் குறித்தும், அதற்கு தேவையான தொழில் துறை பங்களிப்புகள் குறித்தும் அபத்தமான கருத்துகளை முன்வைப்பதையும் பார்க்க முடிகிறது.

உண்மையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் விரிவாக்கத்தை உறுதி செய்வதற்கான செயல்திட்டங்களை மத்திய அரசு கொண்டிருக்கிறது.

இதுவரை ஏற்பட்ட பரிணாமத்தையும் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு உண்மை நிலைமையை அறிய பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்ற வகையில் சிலவற்றைப் பற்றி கூறலாம் என நினைக்கிறேன்.

தற்போதைய மத்திய அரசானது, அதிநவீன விண்வெளி தொழில்நுட்பங்களை முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதோடு, சாதாரண மனிதர்களின் தேவைகளையும் பாதுகாப்புத் துறையின் தேவைகளையும் ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யும்வகையில் விண்வெளிப் பயணங்களுக்கான மாற்றுத்திட்டங்களை முன்வைத்துள்ளது.

இந்தத் திட்டம், தொலைநோக்கு அணுகுமுறையை வைத்திருக்கிறது. இது உலக விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியாவிற்கு ஓர் முதன்மையான இடத்தை வழங்கும் திட்டம் என்றே சொல்லலாம்.

இஸ்ரோ உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில் மட்டுமல்லாமல், தொலை-கல்வி, தொலை-மருத்துவம், பேரிடர் உயர் மேலாண்மை, விவசாயத்திற்கான அறிவியல் பங்களிப்பு, மீன்வளம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற சமூக நலனுக்கான உதவிகளையும் வழங்கிவருகிறது.

இந்தியாவின் கடந்த ஆண்டு விண்வெளி ஆய்வுத்துறைக்கான பட்ஜெட் சீனா, அமெரிக்கா நிதி ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது சற்றே ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக ஒதுக்கி உள்ளதை அறியலாம்.

நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி முன்னேற்றத்திற்காக இஸ்ரோவிடம் தற்போதுள்ள தொழிற்நுட்பங்களை பயன்படுத்த தனியார் துறை அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது, செயற்கைக்கோள்கள், ஏவுதல்கள் மற்றும் விண்வெளி அடிப்படையிலான சேவைகளில் சிறந்த முன்னேற்றத்தை வழங்கும்.

இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனமான, எஸ்.எல்.வி 3-க்கு பிறகு தொழில்துறையினருடன் உற்பத்திப் பொறுப்பை பகிர்ந்து கொண்டது.எனவே, தனியாரோடு இணைந்து மறுகட்டமைப்பு செய்யும் அரசின் திட்டம் என்பது மிக சிறந்ததுதான்.

இன்று தொழில்துறையினரால் தயாரிக்கப்படும் கிரையோஜெனிக் இயந்திரங்கள் கூட இஸ்ரோவால் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒன்றுதான்.

இஸ்ரோவின் வரவு செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் தொழில்துறை மூலமாகவே செலவிடப்படுகிறது.

தொழிற்துறை முழுமையான கணினிமயமாக்கப்பட்டதையடுத்து,நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) என்ற புதிய நிறுவனம் கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்பு உருவாக்கப்பட்டது. அதுவும் தற்போது நன்றாக முன்னேறிவருகிறது.

செயற்கைக்கோள் உற்பத்தி, பூமி கண்காணிப்புப் பயன்பாடுகள் உள்ளிட்டவற்றில் தொழில்துறை பங்கேற்பு வாய்ப்பைப் பெற்றுள்ளன.

அதேசமயம், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருக்கும் துறைசார் ரகசியம், பாதுகாப்பு விதிமுறைகள் நமது நாட்டிலும் கடுமையானவையாக இருக்க வேண்டும்.

விண்வெளி ஏவுகணை வாகன வளர்ச்சியில் தனியார் பங்களிப்போடு நாம் வெற்றியை உறுதி செய்த நமது ஸ்பேஸ் எக்ஸ் (Space X) குறித்து சிந்தித்தால், தனியார் பங்களிப்போடு நாம் இன்னும் பல வெற்றிகளை அடைய முடியுமென்பதை உணர முடியும்.

இது உண்மையில் அமெரிக்காவின் விண்வெளித் திட்டத்தின் வரலாற்றை நினைவுகூர்கிறது.

உலகளவில் விண் வெளி ஆய்வில் இஸ்ரோ வேறு யாரைக் காட்டிலும் பின்னால் இல்லை. 2009ஆம் ஆண்டில், "ஒரு பார்வை - 2020” ஆவணம் இஸ்ரோ தயாரித்து வழங்கியது. அதில் மீட்டெடுக்கக்கூடிய, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணைகள், உயர் அலைவரிசை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் ஆகிய இரண்டு நிலைகளுக்கான வளர்ச்சித் திட்டம் குறித்து அறிவுறுத்தி இருந்தோம். ஆனால், அப்போதைய மத்திய அரசு இதனை புறக்கணித்தது.

பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர்தான், நமது ஆவணத்தில் சொல்லப்பட்ட மனிதர்களின் விண்வெளி பயணத்திற்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. அதுதவிர இஸ்ரோவின் ஒரு பார்வை - 2020 ஆவணத்தில் முன் வைக்கப்பட்ட பல திட்டங்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இப்போது, ​​புதிதாக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான பணிகளில் இஸ்ரோ முழு வேகத்தில் செயலாற்றிவருகிறது.

இந்த மறு கட்டமைப்பின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஆணையம், துறை இரண்டுமே கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநரால் வழிநடத்தப்படுகின்றன.

அரசின் இந்தத் திட்டம் ஒரு முன்மாதிரியான செயல்திறனை அளிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details