டெல்லி: குடியரசுத் துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்.1) மத்திய வரவு செலவு திட்ட அறிக்கையை (பட்ஜெட்) காலை 11 மணிக்கு மக்களவையில் உரையாற்றி தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், ஜனவரி 29 அன்று, பொருளாதார ஆய்வு 2020-21 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.7 சதவீதம் சுருங்கக்கூடும் என்றும் வருகிற நிதியாண்டில் 11 சதவீதமாக உயரும் என்றும் பொருளாதார ஆய்வுகள் முன்னறிவித்துள்ளன.