ஒரு நாட்டின் எல்லைக்குள் குற்றம் செய்து விட்டு, அல்லது குற்றம் சுமத்தப்பட்டு வேறு நாட்டுக்கு தப்பியோடிய நபர்களுக்கு எதிராக சர்வதேச காவலர்கள் அறிவிப்புகள் (நோட்டீஸ்) வழங்குவார்கள். இதன் நோக்கம் குற்றவாளி அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர்களின் தகவல்களை அறிந்து அவர்களை விசாரிக்க வழிகோலுவதே ஆகும்.
அந்த வகையில் பல வண்ணங்களில் சர்வதேச அறிவிப்புகள் வெளியாகும். ஒவ்வொரு வண்ணத்தின் பின்னாலும் ஒரு அர்த்தம் புதைந்துள்ளது. அது குறித்து மிகச் சுருக்கமாக இங்கு காணலாம்.
1) சிவப்பு நோட்டீஸ்
நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறியப்பட்டவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொண்டு அவர்களை கைது செய்ய விநியோகிக்கப்படும்.
2) மஞ்சள் நோட்டீஸ்
காணாமல் போன சிறார்கள் மற்றும் பெரியோர்கள் தங்களை அடையாளம் காண முடியாத நபர்கள் குறித்த தகவல்களை அறிந்துக் கொள்ள அளிக்கப்படும்.
3) நீல நிற நோட்டீஸ்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் இருப்பிடம் மற்றும் தகவல்கள் பற்றிய கூடுதல் விவரங்களை அறிந்துக் கொள்ள அளிக்கப்படும்.
4) கருப்பு நோட்டீஸ்
அடையாளம் தெரியாத பிணங்கள் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள கருப்பு நோட்டீஸ் அளிக்கப்படும்.