தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 31, 2019, 2:38 AM IST

ETV Bharat / bharat

நில மோசடி வழக்கில் ஆந்திர தொழிலதிபர் கைது

பெல்கிரேட்: வேனிபிக் நில மோசடி வழக்கில் ஆந்திர தொழிலதிபர் நிம்மகடா பிரசாத் செர்பியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

industrialist

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் நிம்மகட பிரசாத். இவர், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான செர்பியாவுற்கு சுற்றுலா சென்றிருந்த நிம்மகடா பிரசாத்தை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெனிபிக் (VANIPIC) நில மோசடி வழக்கின் தொடர்ச்சியாக ஐக்கிய அமீரகம் அரசு அளித்த புகாரை அடுத்து, செர்பியா காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, இதே வழக்கில் நிம்மகடா பிரசாத் இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details