தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 21, 2020, 4:33 PM IST

ETV Bharat / bharat

பெற்ற குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்!

உத்தரப்பிரதேசம்: பெற்ற தாயே தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Womensetefire  uttar pradesh woman committs suicide  woman sets herself on fire  woman sets herself and children on fire  uttar pradesh crime  தற்கொலை  கொலை  உத்தரபிரதேசம் தற்கொலை  உத்தரபிரதேசம் கொலை
uttar pradesh woman committs suicide

உத்தரப்பிரதேச மாநிலம் மொஹாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கரண்(35). கூலித் தொழிலாளியான இவரது மனைவி ரஜினி (30). இவர்களுக்கு பிரவேஷ் (12), சோட்டு (10) என்ற இரு குழந்தைகள். நேற்று கரண் வெளியே சென்றுள்ளார்.

அப்போது, ரஜினி தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் மூவரது உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்ற தாயே தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தென்காசியில் கார் விபத்து: 3 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details