தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவல் ஆய்வாளர் மீது துணை காவல் ஆய்வாளர் பாலியல் புகார் - காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார்

லக்னோ: மீரன்பூரில் காவல் ஆய்வாளர் ஒருவர் திருமண ஆசைகாட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக பெண் துணை காவல் ஆய்வாளர் புகார் அளித்துள்ளார்.

police-inspector
police-inspector

By

Published : Feb 23, 2020, 5:07 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் காவல்நிலையத்தின் பெண் துணை காவல் ஆய்வாளர், அவர் பணிபுரியும் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் சந்தீப் சவுகான் என்பவர் திருமணம் செய்துகொள்ளுவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக மீரன்பூர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புகாரில், காவல் ஆய்வாளர் சந்தீப் சவுகான் என்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி வரதட்சணையாக ரூ. 10 லட்சம் மற்றும் கார் ஒன்றை கேட்டு முதற்கட்டமாக ரூ. 5 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டார். அதன்பின் அவர், கடந்த மார்ச் மாதம் என்னை காஜியாபாத் மாவட்டம் போபுரா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்புணர்வு செய்தார்.

எங்கள் திருமணம் 2019 ஏப்ரல் 21ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், தற்போது அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சந்தீப் சவுகான் தற்போது ஷாம்லி மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு ஆயுள்

ABOUT THE AUTHOR

...view details