உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், விவாகரத்து மனு ஒன்றை 'சரியா' நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் அப்பெண்மணி கூறிய காரணம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மனுவில், 'எங்களுக்குத் திருமணமாகி 18 மாதங்கள் ஆகின்றன. சில சமயங்கள் சமையலறையிலும், வீட்டு வேலைகளிலும் உதவி செய்வார். இதுவரை, எங்களுக்குள் சண்டை ஏற்படவில்லை. நான் ஏதேனும் தவறு செய்தாலும், அவர் உடனடியாக மன்னித்து விடுகிறார். எனக்கு அவருடன் சண்டை போட வேண்டும். கணவரின் அதீத காதல் வேண்டாம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.