உத்தரப் பிரதேம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்கதையாகி-வருகின்றன. இந்நிலையில், சம்பல் மாவட்டத்தின் பஹ்ஜோய் நகரில் உள்ள ஒரு வீட்டில் சகோதரிகள் இருவர் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலைப் பொழுதில் திடீரென அவர்களின் வீட்டிற்குள் காவலர்கள் வேடத்தில் இரண்டு பேர் நுழைந்துள்ளனர்.
சகோதரிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகவும் இது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த அவர்கள் இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரவேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றனர். இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் செல்லாமல் அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கேயே விட்டுச்சென்றனர்.