கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கே திண்டாடி வருகின்றனர்.
கரோனா வைரஸ் பாதிப்பால், உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 3 ஆயிரத்து 664 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 82 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கரோனா வைரசைக் கருத்தில் கொண்டு உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பாக 2020-21ஆம் நிதியாண்டில் அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்வதற்குத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.