இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலர் அமித் மோகன் பிரசாத், "53 மாவட்டங்கள் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதேபோன்று பிளிபீத், லாக்கிம்பூர், ஹத்ராஸ், பெய்ரேலி, பிரயக்ராஜ், மாகாஜ்கன்ஞ், ஷாஜாஹான்பூர், பாராபான்கி, ஹார்டோய், கௌஷம்பீ ஆகிய 10 மாவட்டங்கள் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுவரை ஆயிரத்து 412 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்றார்.