தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 10, 2020, 2:19 PM IST

ETV Bharat / bharat

ஓடும் காரில் பெண் பாலியல் வன்கொடுமை: வருவாய் அலுவலருக்கு வலைவீச்சு!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த வருவாய் அலுவலர் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

UP girl raped
UP girl raped

உத்தரப் பிரதேசம் பந்தா மாவட்டத்தில் 18 வயது இளம்பெண்ணை கடந்த சனிக்கிழமையன்று, அவர் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வருவாய் அலுவலர் சுஷி பட்டேல் என்பவர் உள்பட மேலும் இருவர், கடத்த முயன்று அவர்கள் வந்த வாகனத்தில் ஏற்றினர். தடுக்கவந்த அவர் தாயாரை தள்ளிவிட்டு அந்தப் பெண்ணை கடத்திச்சென்றனர்.

தொடர்ந்து அப்பெண்ணை ஓடும் காரில் வைத்து மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் ஓடும் காரிலிருந்து அந்தப் பெண் தப்ப முயன்றும் முடியாமல்போனது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்றுவருகிறது. அதைத் தொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருவாய் அலுவலர் உள்பட மூன்று பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details