கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்திருக்கும் சூழலில், ஆக்ரா நகரில் இரண்டு நாள்களில் 28 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் (ஜூன் 22) ட்வீட் செய்திருந்தார். இந்தத் தகவல் ஆதாரமற்றது என்றும், இதுபோன்ற பொய்க் குற்றச்சாட்டுகள் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுமாறும் ஆக்ரா மாவட்ட ஆட்சியர் பிரபு நாராயன் சிங் பிரியங்காவுக்குக் கடிதம் எழுந்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய உத்தரப் பிரேதச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா, "கோவிட்-19 வைரஸ் உத்தரப் பிரதேசத்தில் பரவத் தொடங்கிய நாளிலிருந்தே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.
ஆக்ராவில் நோய்த் தொற்றால் உயிரிழந்தோர் குறித்து அவர் வெளியிட்ட செய்தி சுத்த பொய். ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 24 மணி நேரத்துக்குள் பிரியங்கா அந்த நோட்டீசுக்குப் பதிலளிக்கவில்லை என்றால் அவர் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.