காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளையொட்டி உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், "நமது நாடு மற்றும் சமூக வளர்ச்சிக்கு எவ்வாறு பாடுபடவேண்டும் என்று எடுத்துக்காட்டாய் விளங்கிய தேசத் தந்தையின் வழி நடப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மக்களால் தூர வீசப்படும் நெகிழி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு நம் சுகாதாரத்துக்கும் பாதகமாக அமைகிறது என்பதை நாம் உணராதிருக்கிறோம். நெகிழியை உணவென நினைத்து கால்நடைகள் உட்கொள்கின்றன.