உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் (89) சிறுநீரக பிரச்னை காரணமாக உடல்நலக் குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவந்த நிலையில், இன்று காலை 10.44 மணிக்கு காலமானார்.
இந்நிலையில் ஆனந்த் சிங் பிஷ்ட் காலமான செய்தி யோகி ஆதித்யநாத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு உயர் அலுவலர்களுடன் யோகி ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் தந்தை மறைந்த செய்தி அறிந்த பின்னரும் கூட்டத்தை அவர் தொடர்ந்து நடத்தியுள்ளார்.