தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக எம்.பி.க்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது - உன்னாவ் தொகுதி பாஜக எம்பி சாக்ஷி மகராஜ்க்கு கொலை மிரட்டல்

லக்னோ: பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜுக்கு  கொலைமிரட்டல் விடுத்த நபரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்தனர்.

up-ats-arrests-man-who-threatened-to-blow-up-sakshi-maharaj
up-ats-arrests-man-who-threatened-to-blow-up-sakshi-maharaj

By

Published : Jun 18, 2020, 1:50 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு யாரோ ஒருவர் கொலை மிரட்டல்விடுத்துள்ளதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். மிரட்டல் விடுத்தவரின் எண்ணானது வெளிநாட்டைச் சேர்ந்ததாக இருந்ததால், இந்த வழக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், வெளிநாட்டில் செயல்பட்டுவந்த இந்த எண் சில நாள்களாக இந்தியாவிற்குள் செயல்படுவதாகத் தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தொலைபேசி எண்ணின் செயல்பாட்டைக் கொண்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த எண் உத்தரப் பிரசேத மாநிலம், பிஜினோரில் செயல்பட்டுவருவது தெரிந்தது. அங்கு விசாரணை மேற்கொண்டவர்கள் முகமது கஃபர் என்ற 30 வயது தையல்காரரைக் கைதுசெய்தனர். அவரிடமிருந்து செல்போன், ஆதார் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) போன்றவற்றையும் பறிமுதல்செய்தனர்.

விசாரணையில், அவர் சில நாள்களுக்கு முன்பு குவைத்திலிருந்து இந்தியா திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரை பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மண்ட்வாலி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details