தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி: ரூ.1.50 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது - உத்தரப்பிரதேசத்தில் கஞ்சா கடத்திய கும்பல்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில காவல் துறையின் சிறப்புப் பணிக்குழு, 750 கிலோ எடையுள்ள கஞ்சா கடத்தப்பட்ட விவகாரத்தில் 5 பேரை கைது செய்தனர்.

உ.பி: ரூ.1.50 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
உ.பி: ரூ.1.50 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

By

Published : Nov 14, 2020, 8:03 PM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஹதோஹி மாவட்டத்தில், நேதா நகர் இருப்புப்பாதை கிராசிங்கில், இந்த 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

கைதானவர்கள் 5 பேரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களது பெயர்கள் சுரேந்திர குமார் ஜெய்ஸ்வால், பீம் பிரசாத் குப்தா, ஹரேந்திர குமார் பால், ராஜேஷ் பால் மற்றும் தீரஜ்குமார் என அறியப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 750 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.1.50 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதான 5 பேர்களிடமிருந்தும் இரண்டு இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள், மூன்று ஆதார் கார்டுகள், மூன்று வாகன உரிம அட்டைகள் மற்றும் மூன்று வாக்காளர் அடையாள அட்டைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

காவல் துறையின் விசாரணையின்போது, கஞ்சாவை ஆந்திர மாநிலத்திலிருந்து வாங்கி வந்து, உத்தரப்பிரதேசத்தில் அதிகவிலைக்கு விற்றதாக கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பஹதோஹி மாவட்டத்தில், சூரியவாவா காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தில் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details